வவுனியா ஓமந்தை பகுதியில் மாட்டுடன் மோதுண்டு வாகனம் விபத்திற்குள்ளாகியது.
புளியங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி நேற்று (14) மாலை சென்று கொண்டிருந்த கென்ரர் ரக வாகனம் ஓமந்தை இறம்பைக்குளம் சந்தியில் சென்று கொண்டிருந்தபோது மாடு குறுக்கிட்டமையால் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியைவிட்டு விலகியுள்ளது. எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.