தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றிற்கு தமிழ்மக்கள் அனைவரையும் ஒன்று திரண்டு வருமாறு அருட்தந்தை மா.சத்திவேல் அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் 07 ஆம் திகதி கொழும்பு மருதானை சி.எஸ்.ஆர் மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு நடாத்த இருப்பதாகவும் மக்கள் அனைவரையும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்வதோடு அதனைத் தொடர்ந்து கொழும்பு லிப்ரன் சுற்று வட்டத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டதிலும் கலந்து கொண்டு தமிழ் மக்களை தமக்கு ஆதரவு தாருமாறு அருட்தந்தை மா.சத்திவேல் ஊடகங்கள் மூலமாக தகவல் விடுத்துள்ளார்.