அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு- சஜித்

SAJITH
SAJITH

நாட்டில் ஐக்கியதேசியகட்சி அரசாங்கம் அமையப்பட்ட பின்னர் தற்போதைய அரசாங்கத்தால் பழிவாங்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஐக்கியதேசியகட்சியின் முன்னாள் பிரதித்தலைவர்சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனக்கு பதவி மோகம் இல்லை எனவும் பதவிக்காகவோ அல்லது வேறு வரப்பிரசாதங்களுக்காகவோ கட்சியை பிரிக்க இடமளிக்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதிகளவான அரசியல் பழிவாங்கல்கள் தற்பொழுது இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி தேர்தலில் பாடுபட்ட சம்பிக்க ரணவக்க இன்று பழிவாங்கப்பட்டுள்ளதாகவும் அவர்மேலும் தெரிவித்துள்ளார்.