யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக பொது மக்கள் அதிகமாக நடமாடும் யாழ் மின்சார நிலைய வீதி பகுதி இன்றைய தினம் இராணுவத்தினரால் நீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டதோடு கிருமித் தொற்று நீக்கி விசிறும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ் குடாநாட்டில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இராணுவத்தின் 512 வது பிரிகேட் படையினரால் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.