மட்டக்களப்பில் மினி சூறாவளி 42 வீடுகள் சேதம்

WhatsApp Image 2021 07 16 at 13.23.50
WhatsApp Image 2021 07 16 at 13.23.50

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசிய மினி சூறாவளினால் வாகரை வாழைச்சேனை ஆகிய காவல்துறை பிரிவுகளில் 42 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாட் தெரிவித்தார்.

இந்த மினி சூறாவளி நேற்று வியாழக்கிழமை (15) இரவு திடீரென வீசியதையடுத்து வீடுகளின் கூரைகளின் ஓடுகள் மற்றும் தகரங்கள் என்பன தூக்கி வீசியதையடுத்து வாகரையில் 30 வீடுகள், வாழைச்சேனையில் ஒரு வீடு, கிரானில் 10 வீடுகளும் கோறளைப்பற்று மத்தியில் ஒரு வீடு உட்பட 42 வீடுகள் சேதமடைந்துள்ளது

இதில் இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் இந்த குடும்பங்கள் தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.