முல்லைத்தீவு செல்வபுரத்திலுள்ள வீட்டிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

IMG 20210716 WA0082
IMG 20210716 WA0082

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட  முறிகண்டி, செல்வபுரம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் வீட்டின் உரிமையாளரான (61 வயது) குஞ்சுமோகன் அசோகன் என்பவரே இவ்வாறு சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசுவது தொடர்பாக அயலவர்களால் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட தகவலுக்கமைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலமாக அடையாளம் காணப்பட்டவரின் மனைவி, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பிள்ளைகள் தொழில் நிமித்தம் வேறு பகுதியில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.