கண்டி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இன்று(18) முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக 625,000 தடுப்பூசிகள் கண்டி மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
எனவே பொதுமக்கள் எவ்வித பயமுமின்றி தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.