திம்புளை பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் இன்று பிற்பகல் யுவதி ஒருவர் தவறி விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற 4 பெண்களில் ஒருவரே இவ்வாறு தவறி விழுந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை – லிந்துலை லென்தோமஸ் தோட்ட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே காணாமல் போயுள்ளார்.
இந்த நிலையில், இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் விமான படையினர் இணைந்து காணாமல்போன யுவதியை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.