நேற்று 10 ஆயிரம் பேருக்கு மொடர்னா தடுப்பூசி ஏற்றப்பட்டது

1626668235 vaccine 02
1626668235 vaccine 02

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 5 ஆவது கொவிட் தடுப்பூசியான மொடர்னா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி நேற்றைய தினம் (18) நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமைய, நேற்றைய தினத்தில் 10,088 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினத்தில் (18) மாத்திரம் 71,674 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 10,816 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 385,885 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் 1,713 பேருக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் இதுவரை 159,081 பேருக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் 14,464 பேருக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அதேபோல், நேற்றைய தினம் 960 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில் இதுவரை 46,753 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.