மட்டக்களப்பு சுவிஸ்கிராமத்தில் பூட்டியவீட்டை உடைத்து பணம், தங்கம் கொள்ளை

download 1 58
download 1 58

மட்டக்களப்பு சுவிஸ்கிராமம் பகுதியில் பூட்டியிருந்த வீடு ஒன்றின் கூரையை உடைத்து உள்நுழைந்து அங்கிருந்த ஒரு இலட்சத்து 17 ஆயிரம் ரூபா பணம் மற்றும் தங்க சங்கிலி கைத்தொலைபேசி என்பற்றை திருடிச் சென்ற சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த வீட்டின் உரிமையாளர் உட்பட அனைவரும் சம்பவதினமான இரவு சுமார் 8 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு குடும்ப சகிதமாக சென்று இரவு 10 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்த வீட்டைத்திறந்தபோது வீட்டின் கூரை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 888 ரூபா பணம் ஒன்றை கால் பவுண் எடையுடைய தங்கசங்கிலி மற்றும் கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து காவல்துறை தடவியல் பிரிவு வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.