பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
இலங்கை மின்சார சபையை விற்பனை செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக, கெரவலபிட்டியில் உள்ள மின் உற்பத்தி மையத்தின் 40 சதவீத உரிமையை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டு இருப்பதாககுற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றும் பல் வேறு கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபையின் பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.