காத்தான்குடி, மட்டக்களப்பு காவல்துறை பிரிவுகளில் உள்ள பகுதிகளில் ஜஸ் போதை பொருள் மற்றும் கஞ்சாவுடன் 5 பேரை இன்று செவ்வாய்க்கிழமை (20) கைது செய்துள்ளதாக அந்தந்த பிரதேச காவல்துறையினர் தெரிவித்தனர்.
காத்தான்குடி காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் காத்தான்குடி 6 பிரிவு பாலமுனை பகுதியில் சம்பவதினமான இன்று பகல் 1430 மில்லிக்கிராம், 490 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் இருவரையும், 4250 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.
அதேவேளை மட்டக்களப்பு தலைமையக காவல் பிரிவிலுள்ள நாவக்கேணி மற்றும் குமாரபுரம் பகுதியில் 100 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் ஒருவரையும் 24 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் ஒருவர் உட்பட இருவரை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.