வவுனியா அரச அதிபராக கடமையாற்றி வடமாகாண பிரதம செயலாளராக பதவி உயர்வு பெற்றுச்செல்லும் சமன் பந்துலசேனவிற்கு வவுனியாவில் இன்று (21) வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்விருட்சம் சமூகஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வவுனியா மாவட்டசெயலக வாயிலில் இருந்து மங்கள வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட பிரதம செயலாளருக்கு மாலை அணிவித்து கௌரவம் அளிக்கப்பட்டது.
நிகழ்வில் மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் நா.கமலதாசன், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்கள், அரச உயர்அதிகாரிகள், மதகுருமார்கள் கலந்து கொண்டனர்.