யாழ் மாநகர முதல்வரின் “தூய அழகியநகரம் ” திட்டத்தின் ஒரு பகுதியாக ஆரியகுளம் துரித அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மேற்கொண்ட முயற்சியினால், தியாகி அறக்கொடை நிதியத்தின் வாமதேவா தியாகேந்திரனுடைய அனுசரணையில் குறித்த குளமும் மற்றும் அதன் அயல் பகுதிகளும் புனரமைத்து அழகுபடுத்தப்படவுள்ளது.
அங்குரார்ப்பண நிகழ்வின் நினைவாக செயற்றிட்டத்தை விளக்கும் பதாகை ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், மாநகர ஆணையாளர்,தியாகி அறக்கொடை இயக்குநர் வாமதேவா தியாகேந்திரன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர பொறியியலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.