கொவிட் மரண எண்ணிக்கை 4,000 கடந்தது!

Covid 19 death
Covid 19 death

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,002 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, இலங்கையில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 4,000ஐக் கடந்தது.

நேற்று பதிவான மரணங்களில் 17 பெண்களும் 26 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.