நல்லாட்சி அரசாங்கத்திற்கு சமகால அரசாங்கம் பதிலடி- தேரர் குற்றச்சாட்டு

sumanarathna thero
sumanarathna thero

நல்லாட்சி அரசாங்கத்தில் கடந்த அரசிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செயற்பட்டதனைப் போன்று சமகால அரசும் செயற்படுவதாக மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் மற்றைய தரப்பினர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். தற்போது, இந்த அரசாங்கமும் அதே நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என தெரிவித்தார்.

இந்நிலையில் பாட்டாளி சம்பிக்க ரணவக்க கைது, அதனையடுத்து முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு முற்படுகின்றமை, இதேவேளை ஐ,தே,கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்ய வேண்டும் என தெரிவிக்கின்றமை போன்றைவைகளை குறிப்பிடலாம்.