ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட மூவரும் இன்று நீதிமன்றுக்கு!

download 1 76
download 1 76

டயகம சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரது மாமனார், சிறுமியை பணிக்கு அழைத்து வந்த தரகர் ஆகியோர் இன்று(24) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அதேவேளை வேறொரு பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான ரிஷாட்டின் மைத்துனரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது