வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் மதுபோதையில் சென்றவர்கள் தாக்கியதில் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த சம்பவம் இன்று (25) மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் மதுபோதையில் நின்றிருந்த ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவினர் அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடாத்திவிட்டுத்தப்பி சென்றுள்ளனர்.
சம்பவத்தில் பெண் உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை ஈச்சங்குளம் காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த நபர்களால் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.