இராஜமகேந்திரனின் இழப்பு அதிர்ச்சியளிக்கின்றது – தமிழ்க் கூட்டமைப்பு

download 1 80
download 1 80

கப்பிடல் மகாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.இராஜமகேந்திரனின் இழப்பு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

“ஆர்.இராஜமகேந்திரன் இலங்கையின் இலத்திரனியல் ஊடகத்துறையில் முன்னணி வகித்ததோடு, பல்வேறு துறைகளில் தடம் பதித்து பல சாதனைகளை மட்டுமல்லாது மக்களுக்கும் பாரிய சேவையையும் புரிந்துள்ளார்.

விளையாட்டு, கலைத்துறை போன்ற பல துறைகளுக்கும் அனுசரணை வழங்கியதோடு அத்துறைகள் மேம்படவும் அயராது உழைத்த அவர் அவற்றிற்கு ஆற்றிய பங்கு அளப்பரியது.

அன்னாரின் பிரிவால் துயருரும் அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் ஊழியர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.