கடும் மழையால் கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கின

rain 720518
rain 720518

இன்று காலை முதல் பெய்துவரும் கடும்மழையின் காரணமாக கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொரளை  கின்ஸி வீதி, தும்முல்ல சந்தி மற்றும் ஆமர் வீதி உள்ளிட்ட வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கி உள்ளதாகவும் இதனால் அவ்வீதிகள் ஊடான போக்குவரத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.