மன்னாரில் தற்போது வரை 46 ஆயிரத்து 440 பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (26) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்டத்தில் இது வரையில் 52 ஆயிரத்து 144 பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட 600 பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளில் கிடைக்கப் பெற்றுள்ள முடிவுகளின் அடிப்படையில் 14 பேருக்கு தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்