நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ, கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது