யாழ்ப்பாணம் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையினால் உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை உரத்தினை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்றையதினம் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வடக்கு மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி எஸ்.அஞ்சனாதேவி, சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.