ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரான ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இவர் சுமார் 5 மணிநேரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அழைப்புக்கமைய இவர் இன்று காலை 10 மணியளவில் முன்னிலையானார்.
இதன்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வந்திருந்தனர்.