பசில் மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

pasil
pasil

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு இடையே நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சுங்க அதிகாரிகள் தொழில் ரீதியாக முகங்கொடுக்கும் நடைமுறை சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை சுங்கத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பல நிறுவனங்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள செல்லும்போது முகங்கொடுக்கும் இன்னல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.