வடக்கில் நேற்று 40,391 பேருக்கு தடுப்பூசி ஏற்றல்

163158 corona vaccine reuters1 1
163158 corona vaccine reuters1 1

வடக்கு மாகாணத்தில்  40 ஆயிரத்து 391 பேருக்கு நேற்று சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன என்று
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நேற்று  வடக்கு மாகாணத்தில் சினோபார்ம் முதலாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்றன. இந்தத் திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

இதன்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 39 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 110 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 ஆயிரத்து 865 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 9 ஆயிரத்து 377 பேருக்கும் என வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 40 ஆயிரத்து 391 பேருக்குத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன” – என்றுள்ளது.