மேலுமொரு பிரதேசம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு!

thanimai 696x397 2
thanimai 696x397 2

நாட்டில் மேலுமொரு பகுதி இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வடமராட்சி கிராம சேவகர் பிரிவே இவ்வாறு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.