ஹிஷாலினியின் மரணம்; மட்டக்களப்பில் போராட்டம்

IMG 4971
IMG 4971

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மகளீர் அணி மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி மட்டக்களப்பு காவல் நிலையத்துக்கு முன்னால் உள்ள வீதி சுற்றுவட்டத்தில் இன்று (30) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்து, மக்கள் பிரதிநிதி சிறுமியை சீரழிப்பதா, சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்து, விசாரணையை துரிதப்படுத்து, வீட்டுவேலை செய்வோரை பதிவு செய் போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு கவனயீர்பு சுமார் ஒருமணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்