வவுனியா மாவட்டத்தில் கடந்த 28ம் திகதி தொடக்கம் கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்திலும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஈச்சங்குளம், புதுக்குளம், கல்மடு கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடனும் சுகாதார நடைமுறைகளை பேணியும் இவ் தடுப்பூசியினை பெற்றுச்செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது.