இன்றைய தினம் (01.08.2021) ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளத்தினூடாக வீட்டுத் தோட்டப் போட்டியினை ஊக்குவிக்கும் முகமாக மரக்கறி விதைகளும், தென்னங்கன்றுகளும் வழங்கும் நிகழ்வு ஒட்டுசுட்டான் பிரதேச சம்மேளன தலைவி ஜெ.தனுஷியா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி த.இரதீசன், ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஆலோசகர்கள் லக்சிதரன், தவசீலன் மற்றும் சம்மேளன உறுப்பினர்கள், இளைஞர் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
தென்னங்கன்றுகள்,வீட்டுத் தோட்ட விதைகளை ஒழுங்கு செய்து வழங்கியிருந்த சம்மேளனத்தின் ஆலோசகர்கள் சத்தியசுதர்சனுக்கும், லக்சிதரனுக்கும் ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் சார்பாக நன்றிகளை தெரிவித்தனர்