நேற்றைய தினம் நாட்டில் 116,664 பேருக்கு எஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரை 756,646 பேருக்கு எஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் 170,000 பேர் தங்களுடைய இரண்டாவது டோஸை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.