அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளார் ரணில்

ranil wickremesinghe
ranil wickremesinghe

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் இலங்கைப் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தனது 43 வருட அரசியல் வாழ்க்கைக்கான பிரியாவிடைக்கு அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே தான் தயராவதாக தெரிவித்துள்ளார்.

மாலிகாகந்த மகாபோதி விகாரையின் தேரர் பானாகல உபதிஸ்ஸ தேரர் எழுப்பிய கேள்விக்கே இவர் இவ்வாறு பதிலளித்தார்.

ரணில் தற்போது விடுமுறைக்காக இந்தியாவுக்கு சென்றுள்ளமையும் வருகிற 28ம் திகதி நாடு திரும்புவார் என்பதும் குறிப்பிடத்தக்கது