கிளிநொச்சி பளை புதுக்காட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து இன்று (04) காலை முல்லைத்தீவு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த அருட்தந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.