சகல அரச சேவையாளர்களையும் பணிக்கு அழைப்பது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 7 மணிமுதல் 11 மணிவரை நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
மருத்துவ உதவியாளர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
இரசாயன பகுப்பாய்வு தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் இதனை தெரிவித்துள்ளார்.