உப காவல்துறை பரிசோதகர் பதவிக்கான நேர்முகத் தேர்வு

IMG 20210806 093532 1
IMG 20210806 093532 1

இலங்கை உப காவல்துறை பரிசோதகர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முக தேர்வு வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (06) காலை 9 மணி முதல் இடம்பெற்றிருந்தது.

குறித்த இறுதி நேர்முக தேர்வில் வடமாகணத்தை சேர்ந்த ஆண், பெண் இருபாலாரும் கலந்து கொண்டனர். ஏற்கனவே அவர்களிற்கான நேர்முகத்தேர்வுகள் கடந்தவருடம் இடம்பெற்றிருந்தது. இன்றைய இறுதி நேர்முகத் தேர்வில் 45 ஆண், பெண் உப காவல்துறை பரிசோதகர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.