30 வயதுக்கு மேற்பட்டோருக்கு எந்தவொரு இடத்திலும் முதலாம் தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

Gottabaya 720x450 2
Gottabaya 720x450 2

தற்போது இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும் எந்தவொரு தடுப்பூசி மையத்திலும், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதலாவது தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன், நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் எந்த நோயாளர்களும் அசௌகரியத்துக்கு உள்ளாக இடமளிக்க வேண்டாம் எனவும் வைத்தியசாலை பிரதானிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.