வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டது.
யாழ்பல்கலைக்கழக வவுனியா வளாகம் தனியான பல்கலைகழகமாக அண்மையில் தரமுயர்த்தப்பட்டது.
இந்நிலையில் அதன் ஆரம்பவிழா எதிர்வரும் 11 ஆம் திகதி நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஆயினும் கொரோனா பரவல் காரணமாக அரச நிகழ்வுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால். குறித்த நிகழ்வு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.