யாழில் முதியவரின் சடலம் மீட்பு

b92177af b983 43cc 99fd d69e19085510
b92177af b983 43cc 99fd d69e19085510

கொழும்புத்துறை உதயபுரம் கடலுக்கு அதிகாலை குளிக்கச் சென்ற முதியவர் ஒருவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்குச் குளிக்கச் சென்ற இவர் நீண்ட நேரமாகியும் காணாத நிலையில் காலை 8.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்பகுதியை சேர்ந்த மனுவேல் செபஸ்டியன் என்கிற வயது 65 வயதான முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்