யாழ். மாநகர முதல்வருக்கு எதிராக போராட்டம்

IMG20210810104738
IMG20210810104738

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்களான ரஜுவ்காந், கிருபாகரன் ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகரசபை நுழைவாயில் முன்பாக இன்று காலை முதல் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

முதல்வர் திட்டமிட்ட வகையில் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பில் தாம் உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் முறையிட்டு உள்ளதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

தமக்கான உரிய தீர்வு கிடைக்காத விடத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.