முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளத்தினை பிறப்பிடமாக கொண்டு பிரித்தானியாவில் வசித்துவரும் புலம் பெயர் உறவுகளின் பிறந்த நாளினை முன்னிட்டு 09.08.21 அன்று மாங்குளம் பிரதேசத்தில் வசிக்கும் 200 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வசிக்கும் சிவசோதி முகுந்தினி, தரணி சிவசோதி ஆகியோரின் பிறந்த நாளில் இந்த உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் மு.முகுந்தகஜன் அவர்களின் ஏற்பாட்டில் மாங்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வில் துணுக்காய் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி மாலனி முகுந்தன், துணுக்காய் கோட்டக்கல்விப்பணிப்பாளர் த.யோகானந்தராசா, புதுக்குடியிப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் க.ஜெனமேஜயந் உள்ளிட்ட கிராம அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து மக்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்துள்ளார்கள்.