பசில் ராஜபக்ஷவுக்கும் கட்சியின் பின்வரிசை நா.உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு

pasil
pasil

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கும், கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது

அலரிமாளிகையில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் தற்போதைய கொவிட்-19 பரவல் நிலை தொடர்பிலும், ஏனைய பிரச்சினைகள் குறித்தும், இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.