நேற்று 428,535 பேருக்கு தடுப்பூசி

202104280021227448 Corona infection SECVPF
202104280021227448 Corona infection SECVPF

இலங்கையில் நேற்று 428,535 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

30,487 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டதாகவும் 2,447 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 108,770 பேருக்கு முதல் சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டதுடன் 277,120 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது.

இதற்கிடையில், 118 பேருக்கு பைசர் தடுப்பூசியின் முதல் டோஸும் 278 பேருக்கு இரண்டாவது டோஸும் மொடர்னா தடுப்பூசியின் முதல் டோஸ் 9,315 பேருக்கும் செலுத்தப்பட்டது.