காவல்துறை மற்றும் கொழும்பு மாநகர சபை இணைந்து முன்னெடுக்கும் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம் கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பு மாநகரசபை அதிகார எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும், எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளாத, 30 வயதுக்கு மேற்பட்டோர் மேற்படி தடுப்பூசி நிலையத்தில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளமுடியும் என காவல்துறை பேச்சாளர் அறிவித்துள்ளார்.