வவுனியா பூந்தோட்டம் சந்தியில் வீதிகளில் பயணிப்போரை வழி மறித்து சுகாதார பிரிவினரால் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
வீதியில் அத்தியாவசிய தேவையின்றி பயணிப்போர், சீரான முறையில் முகக்கவசம் அணியாதவர்கள், சுகாதார முறைகளை பின்பற்றாதவர்கள், பேருந்தில் சமூக இடைவெளியின்றி பயணித்தோர் என 200 க்கு மேற்பட்டவர்களை சுகாதார பிரிவினர் வழிமறித்து பிசிஆர் பரிசோதனை முன்னெடுத்திருந்தனர்.
அவர்களது பிசிஆர் முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.