முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரதேசத்தில் உள்ள ஒட்டறுத்தகுளம் கிராமத்தினுள் நுழைந்த காட்டு யானைகள் வீட்டுத்தோட்ட பயிர்களையும் விவசாய நிலங்களை நாசம் செய்ததாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்
இன்று அதிகாலை கிராமத்தினுள் நுழைந்த யானைகள் வீட்டு காணிகளில் உள்ள பயன்தரு மரங்களை நாசம் செய்திருக்கின்றன
குறித்த பகுதிகளில் யானைகள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதால், தங்களின் விவசாய நிலங்களை பாதுகாக்கும் நோக்கில் மின்சார பாதுகாப்பு வேலி ஒன்றை விவசாயிகள் கோரி நிற்கின்றனர்