நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டால் 20 நாட்களுக்குள் குறைந்தது 1,200 இறப்புகளைத் தடுக்க முடியும் என்று சமூக மருத்துவப் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முடிவெடுப்பதில் 5 நாட்கள் தாமதமானலும் அது 700 பேரின் விருப்பமில்லாத மனிதக்கொலை என்று குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் அகம்பொடி கொரோனா அதிகரிப்பு வரைபடங்களை பதிவிட்டு இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.