ஒரே நாளில் மூவாயிரத்தைத் தாண்டியது கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை

202106270221379439 Corona damage to 1049 police SECVPF
202106270221379439 Corona damage to 1049 police SECVPF

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் நாளாந்த எண்ணிக்கை நேற்று மூவாயிரத்தைக் கடந்துள்ளது.

நேற்று மூவாயிரத்து 39 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 45 ஆயிரத்து 118 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 ஆயிரத்து 563 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 93 ஆயிரத்து 357 ஆக உயர்வடைந்துள்ளது.