நேற்று (12) ஹிக்கடுவ பிரதேசத்தில் ஒரு கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவ காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமையை, 43 வயதான குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13) காலி பதில் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.