உணவு பொருட்கள் சிலவற்றுக்கு விசேட விற்பனை வரி விதிக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. நேற்றுமுதல் எதிர்வரும் ஒரு வருடத்துக்கு அமுலாகும் வகையில் இந்த வரிவிதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நெத்தலி மற்றும் கருவாடு கிலோவொன்றுக்காக 100 ரூபாவும், வெந்தயம் கிலோவொன்றுக்கு 50 ரூபாவும், குரக்கன் மா கிலோவொன்றுக்காக 150 ரூபாவும், கடுகு கிலோவொன்றுக்கு 62 ரூபாவும் விசேட வரியாக விதிக்கப்படவுள்ளது.