நாடு முழுவதும் இன்புளுவென்சா வைரஸ் நோய் தொற்று அதிகரித்துள்ளமையின் காரணமாக மக்கள் அவை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நோய்த்தொற்று அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கர்ப்பிணி தாய்மார்கள், இரண்டு வயதிற்கு குறைந்த குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்டோர் உட்பட பல நாள்பட்ட நோய்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கே இந்த தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் இவர்கள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்த செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
காய்ச்சல், இருமல், தடுமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுமாறு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளது.